செல்வத்துள் செல்வம்
' செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என்கிறார் திருவள்ளுவர். ஒரு ENT specialist ஆன நான் இந்தத் திருக்குறளைக் கொண்டாடவில்லையென்றால் வேறு யார் கொண்டாட முடியும்? எனவே, எங்கோ கேட்கும் அரசியல் பேச்சாளரின் வார்த்தைகள் முதற்கொண்டு சமையல் செய்யும் ஓசை வரை சுற்றிலும் ஓசை சூழவே வாழ்க்கை நகர்கிறது. நகர்தலிலும் ஓசை உண்டு. ஓசையை இசையாக்கி மகிழ முடியுமா? சில இடங்களில், சில சந்தர்ப்பங்களில் முடியும் என்று தோன்றுகிறது. அம்மா முறத்தில் அரிசி புடைக்கும்போது வரும் rhythmic சத்தத்தை இசையாக உணர்ந்திருக்கிறேன். பாத்திரம் தேய்க்கும் சத்தம், குடத்தில் தண்ணீர் நிறையும்போது வரும் சத்தம், மரங்களினுடே காற்று வீசும்போது வரும் சத்தம், குழந்தை ஓடும்போது எழும் ...