தலைப்பிடாமலே சில
1. சில நேரங்களில் சில மனிதர்கள் என்பது எழுத்தாளர் ஜெயகாந்தனின் புத்தகம். இது Lakshmi, Srikanth ஆகியோர் நடிப்பில் திரைப்படமாகவும் எடுக்கப் பட்டது. இந்தத் தலைப்பினை ஒட்டி ஒரு தலைப்பாக 'சில சமயங்களில் சில விஷயங்கள் 'என்ற phrase எனக்கு பிடித்திருந்தது. நாம் பார்க்கிற, கேட்கிற, சிந்திக்கிற தெரிந்து கொள்கிற, அறிந்து கொள்கிற அனைத்தையும் ஏதோ ஒரு தலைப்பினிற்குள்ளே கொண்டுவர இயலாது. ஆகவே தலைப்பிடாமலேயே சிலவற்றை பேசித்தான் ஆக வேண்டி இருக்கிறது. இதைத்தான் எழுத்தாளர் சுஜாதா 'கற்றதும் பெற்றதும்' என்று குறிப்பிட்டு பல அனுபவங்களை, அறிவுகளை தெரிவிக்கிறார். எழுதுவதைப் பற்றி பேச்சு வந்தபோது நான் என் கணவரிடம் எனக்கு Sidney Sheldon , Jeffrey Archer, Chase, Dan Brown இது போன்ற ஆங்கில writers நடை பிடிக்கும் .ஆனால் இந்திய இங்கிலீஷ் writers- இன் நடை பிடிக்காது (ஒரு எழுத்தாளரின் பெயரையும் கூறினேன் ) ,எழுதணும்னா அ...