Posts

குரங்குகள், பாடல்கள், குழந்தைகள்

        முதல் இரண்டு புத்தகங்களுக்குத் தலைப்பு வைக்க யோசித்தது போன்று இதற்கும் யோசித்தேன்; மற்றும் காரணம் கூற விரும்பினேன்.  Blog postகள் எழுதிக் கொண்டிருக்கும்போதே தங்கையும்,குழந்தைகளும் தலைப்பு என்னவென்று கேட்டனர்.  இந்தப் புத்தகத்தில் மருத்துவக் கல்லூரி பற்றி - (குரங்குகள் போலே, மரங்களின் மேலே), பாடல்களைப் பற்றி, குழந்தைகளைப் பற்றி கட்டுரைகள் இடம் பெறுவதால் எல்லாவற்றையும் combine பண்ணி, 'குரங்குகள், பாடல்கள், குழந்தைகள்' என்று பெயர் வைத்தேன். தலைப்பை ,' குரங்குகள், பாடல்கள் மற்றும் குழந்தைகள் ', என்று வைப்பதே சரியான இலக்கணம்.  ஆனால் 'மற்றும்' என்று இடையில் வைப்பது அவ்வளவு நயமாக இல்லாததுபோல் தோன்றியது.  எனவே, அதை skip பண்ணி விட்டேன். இப்போது 'இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ,... ' என்கிற கண்ணதாசனின் ' நிழல் நிஜமாகிறது ' படப் பாடல் நினைவுக்கு வருகிறது. சற்றே இலக்கணம் மாறுவது இலக்கியம் ஆகிறதா? இதை ஆராயப் போனால் track மாறிவிடும். எனவே, வாருங்கள், புத்தகத்திற்குள் போவோம். ... ...             

அறிவியலை வியந்தபோது... ... ...

Image
                               Science என்பதற்கு அறிவியல் என்று அழகு தமிழ்ச் சொல். (அறிவு+இயல்= அறிவியல்.)  சொல் மட்டும் அழகு அல்ல, அறிவியலே அழகுதான். மட்டுமின்றி ஆறுதல்தான். ஆறுதல் தேடி யாரும் science க்குள் செல்வதில்லை. விடைகளையோ, விளக்கங்களையோ தேடிச் சென்று பார்க்கிறபோது அந்த விடைகளும், விளக்கங்களும் கொடுக்கின்ற அறிவு, ஒரு ஆறுதலைத் தருகிறது. அந்த ஆறுதல் அறிவை அறிந்ததால் ஏற்பட்டதா அல்லது தவறான கருத்துகள் நீங்கியதால் ஏற்பட்டதா? Knowledge is power என்று ஒரு saying உண்டு.               அறிவியல் என்பது complicated ஆன விஷயங்களை மட்டுமே உடையதல்ல.  அது பல day to day activity - களில் பரந்து கிடக்கிறது.  உறைந்து கிடக்கும் பனியின் energy யை உருக்கி ஆவியாக்கினால் அது சமையலுக்கும் உதவும், நீராவி enngine- ஐயும் ஓட வைக்கும்  என்பது எளியமையான science என்று எடுத்துக் கொண்டால், ஒரு formula வைப் பயன்படுத்தி குறிப்பிட்ட speed க்கு மேல் ஒரு பொருளை உயரத் தூக்கி எறிந்த...

College 4 ( குரங்குகள் போலே மரங்களின் மேலே... ... ...)

Image
      குரங்குகள் போலே மரங்களின் மேலே . .....       மேற்கண்ட phrase, ' பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித் திரிந்த பறவைகளே, பிரிந்து செல்கின்றோம், நாம் பிரிந்து செல்கின்றோம் ',என்ற திரைப்படப் பாடலில் வருகிறது. அநேகமாக எல்லா கல்லூரிகளிலும் farewell party - யின் போது இப்பாடல் பாடப்படும். ரொம்ப emotional - ஆன பாட்டானதால் சிலபலர் அழவும் செய்வார்கள். இந்த song காலேஜ் இறுதியில்தான் வரவேண்டும். ஆனால் இந்தத் தலைப்பை இங்கே கொடுத்ததினால் பாடல் பற்றி mention பண்ண வேண்டியதாயிற்று.     College part 3 யில் குறிப்பிட்டிருந்த படி  Hostel day, welcome party, farewell party போன்ற விழாக்களின் போது 'அவுத்து விட்ட மாதிரி' ஆகி விடுவோம். இப்படி ஒரு  function போது மரத்தின் மீதேறி  ஃபோட்டோ எடுத்தோம். So, ' குரங்குகள் போலே மரங்களின் மேலே' என்பது சரிதானே?                                மற்றபடி கல்லூரி நாட்களில்  normal routine.  Study holidays - ன் போதும், தேர்வு நேரங்கள...

வாழ்வு பல நிலைப்படும் (Part 1)

Image
                                                                      வாழ்வு பல நிலைப்படும்.       அதாவது பல நிலைகளில் அமையும்.           ஆரம்பத்தில் பெற்றோருடன்  பாதுகாப்பு உணர்வுடன் கூடிய வாழ்வு . இது அலாதியானது. நாமே அறியாமல் வாழ்ந்த ஆனந்த வாழ்வு. வளரும் பருவமாதலால் எல்லாமே புதுமை. இதைப்பற்றி எனது புத்தகங்களில் நிறைய எழுதப்பட்டு விட்டது. எனவே, நகர்வோம்.           அடுத்தது, திருமண வாழ்வு. 1990 மே 14- ம் தேதி; என்னைப் பெண் பார்க்க என் கணவர் குன்னூருக்கு, வீட்டிற்கு வந்தார். வீட்டில் நானும் தங்கையும் மட்டுமே. முன்கூட்டியே  என்னுடைய பழைய கட்டுரை 'நான் அறிந்த சாதியம்' என்பதில் கூறப்பட்டபடி நாச்சியார் மாமியை அழைத்து வந்தாள் தங்கை.      ( கிளைக் கதை- மலை ராணியின் மடியில் பாகம் 4- ல்  ' இந்த மாமி Wellington - ல் இருந...

சில பாடல்களின் தாக்கங்கள்

Image
               தலைப்பைப் பார்த்து மலைத்து விட வேண்டாம். இதில் அதிகமாக இடம் பெறுவது தமிழ்த் திரைப்படப் பாட்டுகளின் இனிய ரசனைதான். அத்துடன் வேறுசில பாடல்களும்.       சின்ன வயதில் பள்ளிப் பாட புத்தகத்தில் இருந்த பாடல், 'பனைமரமே பனைமரமே, ஏன் வளர்ந்தாய் பனைமரமே? ' என்பதாகும். நீலகிரியில் பனை மரங்கள் பார்த்ததில்லை. பொள்ளாச்சிக்குப் பயணம் செய்கின்ற போது, வழியில் தூரத்தில் தென்படும் பனை மரங்களைப் பார்த்ததும் பாடுகின்ற பாடல் இது. இன்றும் கூட பனைமரமும், அதன் உயரமும், அதன் உச்சியில் அமைந்திருக்கும் இலைகளின்  shape - ம், அந்தக் கூடியிருக்கும் கிளை மற்றும் இலைகளுடனான நீண்ட மரத்தின்  shape- ம், குட்டிப் பனைமரத்தின் சின்ன வடிவமும் அழகாகத் தோன்றுகின்றன.         'செந்தூரப் பூவே, செந்தூரப் பூவே' -  8th standard  படித்துக் கொண்டிருந்த சமயத்தில் குடும்பத்தினருடன் thearte  - ல் சென்று பார்த்த (பதினாறு வயதினிலே) படத்தின் பாடல் இது. Opening music அப்படியே அலை அலையாகத் தவழ்ந்து வந்து சில புல்லாங்குழல் bits ...

Name List

   நிறைய உறவினர்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் பெயர்களை mention செய்த போதும், தாய் தந்தை தங்கை கணவர் மற்றும் குழந்தைகள் பெயரை mention செய்யவில்லை. ஆகையால் ஒரு பெயர் list ஐ கீழே பதிவிடுகிறேன் . அப்பா - முஹமது யூசுப்  அம்மா - மஹபூப் பீவி கணவர்- முஹமது இஸாக் தங்கை - மெஹராஜுன்னிஸா தங்கை கணவர்- ஹசன் அலி  மகள்கள் -                ஃபாத்திமா ஃபரா                ரோஷினி   மருமகன்கள்-                 காதர் இப்ராஹிம்                  சச்சின் முஹமது ரஃபீக் பேரன்கள் -                முஹமது ஷயான்                 முஹமது சாஹில்

மழை விட்டும் தூவானம் விடவில்லை

Image
  மழை விட்டும் தூவானம் ... ...       மழை விட்டும் தூவானம் {தூறல்} விடவில்லை என்பது பழமொழி. (இதை  வைத்து வருகின்ற தமிழ்த் திரைப்படப் பாடல்கள்  - 'தூவானம் இது தூவானம் இது தூவானம்.. ...' - 'மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் .. ..... ' )        அதுபோல் , ' மலைராணியின் மடியில் ' தொடர் முடித்து epilogue எழுதிய பின்னரும் இன்னும் கொஞ்சம் எழுதத் தோன்றுகிறது.     12th standard  படித்த போது evening school  விட்ட பின்னர் தோழி ராதாவுடன் பேசியவாறே,  ( அதிலும் குறிப்பாக discuss பண்ணுவது' குமுதம்' வார இதழாகத்தான் இருக்கும் ) வீடு திரும்பி வருவது ஒரு pleasant memory.  School-இலிருந்து மேல் வழி, கீழ் வழி என்று இரண்டு வழிகள். இரண்டுமே பூட்டுகளை உடைய gate- களைக் கொண்டவை.  இரண்டு வழிகளும் சற்றே இடைவெளி விட்டு விட்டு concrete படிக்கட்டுகளால் அமைந்தவைதான். அந்த இடைவெளிகள் குறுக்காக அமைந்த தெருக்களும், mount ரோடும்தான். Mount road குன்னூர் bus stand பக்கத்திலிருந்து ஆரம்பித்து Sim's park வரை செல்லும். ...