மழை விட்டும் தூவானம் விடவில்லை
மழை விட்டும் தூவானம் ... ... மழை விட்டும் தூவானம் {தூறல்} விடவில்லை என்பது பழமொழி. (இதை வைத்து வருகின்ற தமிழ்த் திரைப்படப் பாடல்கள் - 'தூவானம் இது தூவானம் இது தூவானம்.. ...' - 'மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் .. ..... ' ) அதுபோல் , ' மலைராணியின் மடியில் ' தொடர் முடித்து epilogue எழுதிய பின்னரும் இன்னும் கொஞ்சம் எழுதத் தோன்றுகிறது. 12th standard படித்த போது evening school விட்ட பின்னர் தோழி ராதாவுடன் பேசியவாறே, ( அதிலும் குறிப்பாக discuss பண்ணுவது' குமுதம்' வார இதழாகத்தான் இருக்கும் ) வீடு திரும்பி வருவது ஒரு pleasant memory. School-இலிருந்து மேல் வழி, கீழ் வழி என்று இரண்டு வழிகள். இரண்டுமே பூட்டுகளை உடைய gate- களைக் கொண்டவை. இரண்டு வழிகளும் சற்றே இடைவெளி விட்டு விட்டு concrete படிக்கட்டுகளால் அமைந்தவைதான். அந்த இடைவெளிகள் குறுக்காக அமைந்த தெருக்களும், mount ரோடும்தான். Mount road குன்னூர் bus stand பக்கத்திலிருந்து ஆரம்பித்து Sim's park வரை செல்லும். ...