வாழ்வு பல நிலைப்படும் ( Part 2)
வாழ்வின் அடுத்த நிலை குழந்தைகள் பெரியவர்கள் ஆனபின் ஏற்படும் challenging ஆன நிலை. 'தோளுக்கு மிஞ்சியவன் தோழன்' என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, உன் குழந்தை உன் தோளின் உயரத்தைவிட அதிகமாக வளர்ந்து விட்டால் உன் தோழனாக நடத்து என்பது பொருள். இந்த transition period பெற்றோருக்கும் கடினம் ; குழந்தைகளுக்கும் கடினம். நாமும் இந்தக் கட்டத்தைக் கடந்துதான் வந்திருக்கிறோம். ஒரு காலகட்டத்தில் பெற்றோருக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறோம். அது சரியா தவறா என்றுகூட இன்றுவரை புரியவில்லை. அப்பேர்ப்பட்ட ஒரு காலகட்டம் குழந்தைகள் வளர வளர, அவர்களாக உலகத்தைப் புரிந்து கொள்ளவும், தானாக சிந்திக்கவும், independant ஆக உணரவும் தலைப்பட்டபோது ஏற்பட்டது. அதை சிக்கலாக்காமல் நகர்த்திச் செல்வது பெற்றோரின் கடமை; திறமை. படித்துப் பெரியவர்களாக ஆகிக் கொண்டிருக்கும் நேரத்தில் என் முதல் பெண் ' பெரியவள்' ஆனா...