மலைராணியின் மடியில் -முடிவுரை [ Epilogue ]

                        


  Plains- இற்கு shift செய்து பல வருடங்கள் கடந்த பின்னர்  ஒருமுறை , குன்னூருக்கு அருகில் இருக்கின்ற ஓட்டுப் பட்டரை என்ற இடத்தில்  விற்பனைக்கு வந்த housing site  பற்றி விசாரித்தோம்.  அப்போது  promotor  site- ஐப் பார்ப்பதற்கு vehicle arrange  பண்ணினார். மலைப் பாதையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஓரிடத்தில்  tea   சாப்பிடுவதற்காக இறங்கினோம்.  அந்த சமயத்தில் season, climate  பற்றியெல்லாம் பேச்சு வந்தது. அப்போது ஜீப்பின் driver ,  " மலை வாழ்வின் சுவாரஸ்யம் வந்து பார்த்தா தெரியாது ; வாழ்ந்து பார்த்தாதான் தெரியும் "  என்று கூறினார். உடனே என்  husband ,  " இவங்க ஊட்டிக்காரங்கதான் " என்று என்னைக் காட்டிக் கூறினார்.  அந்த  driver மிக்க surprise- உடனும், admiration - உடனும் என்னைப் பார்த்தார்.  ஒரு   meme படித்திருக்கிறேன்.  ' சட்டையின் முதல் பட்டன் சரியாகப் போடாவிட்டால் சட்டையின் அத்தனை பட்டன்களும் தவறாக அமையும்.  இதைச் சொன்னது ஷேக்ஸ்பியர் அல்ல ; எங்கள் டெய்லர் ' என்று.  அதுபோலத்தான் இந்த  driver  கூறியதையும் உணர்ந்தேன். எளிமையான மனிதர்களின் வாயிலிருந்து சில சமயங்களில் பெரிய உண்மைகள் வெளி வருகின்றன. 

                இருபத்து ஆறு வருடங்களுக்கும் அதிகமான காலம் நீலகிரியில் நடந்தது வாழ்க்கை . குழந்தைப் பருவம் தொடங்கி, பள்ளிப் பருவம், கல்லூரி, வேலையில் சேர்ந்தது, திருமணம், முதல் குழந்தை பிறக்க சில காலம் முன்வரை.  இவ்வாறாக நான் வாழ்ந்து பார்த்ததை எழுத்தில் வடித்தேன் - partly.

     Thanking all for reading this,   BYE .

              

Comments

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]