செடி கொடி மரம் வளர்த்த கதை ( Part 1 )



              முகவுரை :-                 Recently we bought a moderately small farmland  ( 2.65 acres ),  about 35 km from  Coimbatore.  Before  buying I had  umpteen number of doubts.  With all my other duties - Profession, house  hold, family and social  -  and also my hobbies including   watching television, reading,  networking ,  singing  -  along with my writing    ( and my husband is also working in college ),  இத்தனையும் வைத்துக் கொண்டு இது தேவையா என்று தோன்றியது.   Since I am to do many tasks,  I give only divided time to each .  அச்சமயம்   '' lease  -க்கு விட்டு விடலாம் ,  ஆட்கள் பார்த்துக் கொள்வார்கள் ,ஜெயலலிதா கொடநாடுல   estate வாங்குச்சு, அதா போய் களை எடுத்துச்சு, அதா போய் தேயிலை பறிச்சுச்சு. ''  என்றெல்லாம் பேச்சுக்கள் வர   ( ஒரு around 3 acre farm- க்குப் போய்  Jayalalitha  எல்லாம் ! )   ok ஆனது மனது .  Thinking over about these matters gave ideas  to clear all the hardships to make  it easy and enjoyable or  atleast peaceful.   Even from my childhood  I have been leading a peaceful life  all through the joy, sorrow, ebbs and tides of my life.

           இந்த farm - ல் மாமரங்கள், பலா மரங்கள், தென்னை மற்றும் பனை மரங்கள் இருக்கின்றன.   Bore well-  ம்  சொட்டு நீர்ப் பாசன (drip irrigation )  வசதியும் உள்ளன. 



           To  main post  :- முதன் முதலில் செடி வளர்த்தது குன்னூரில் . ( செண்டுமல்லிப் பூச்செடியும். தக்காளிச் செடியும்தான்.)  தக்காளி விதையிலிருந்துதான் தக்காளிச் செடி வளர்கிறது என்று தெரியாத வயதில், எங்காவது வளர்ந்திருக்கும் சின்னச் செடியை பிடுங்கிக் கொண்டு வந்து நட்டு வைத்து வளர்ப்பது. தக்காளிச் செடியின் வாசம் ரொம்பப் பிடிக்கும்.  அது மஞ்சள் கலர் பூ விட்டு, அது குட்டிக் காயாகி  - புல்லி வட்டம் சூழ இருக்கும் குட்டிப் பிஞ்சுக் காய் பார்க்க அழகாக இருக்கும். 
            பின்னர்  after many decades  ஈரோட்டில் வளர்ந்த தக்காளிச்  செடிகளில் நிறைய தக்காளிகள் கிடைத்தன.

      


                                    


                              அதுபோல் பப்பாளி  தின்றுவிட்டு, மிச்சத்தை  seeds - உடன் உரத்துக்காகப் போட்டபோது ஒரு பப்பாளி மரம் வளர்ந்தது. மரத்திலேயே முக்காவாசி பழுத்தவுடன் பறித்து வைத்து,  full - ஆக  பழுத்தவுடன் சாப்பிட செம taste.
                                      

                Ok   ,  back to past-     Harewood Quarters-  ல்  பக்கத்து வீட்டில்  Srinivasan  என்பவர் குடியிருந்தார்.  அவர்கள் வீட்டின்  backside -ல் தோட்டம் போட்டனர்  மனோ, கார்த்தி, சூரி என்னும் அவர்கள் வீட்டுப் பசங்கள்.  கூட நாங்கள் - முக்கியமா நானும், நாராயணன்  என்ற பையனும்.  பின்னாலிருந்த புல் தரையை சமப் படுத்தி ,  களைகள், புல் ஆகியவற்றை remove பண்ணி, அதன்பின் மண்ணை சமப்படுத்தினோம்.   பக்கத்திலிருந்தெல்லாம் மூங்கில் தட்டைக் கூடையில்  மண் தூக்கிக் கொண்டு வந்து கொட்டி  even -ஆக நிரவி விட்டோம்.   மண் super -ஆக dark brown colour -ல் இருந்தது.   சுற்றிலும் வேலி போட்டு, கதவு வைத்து  -பெரிய பையன்கள் இதையெல்லாம் செய்வார்கள். நாங்கள் எடுபிடி வேலை.  முக்கியமாக நல்ல மண்  எடுத்து வருவோம். அப்புறம், தோட்டம் போட்டபின் தண்ணீர் பிடிப்பது சம்மந்தமாக என் அப்பா அந்தப் பையன்களைத் திட்டி சண்டை போட்டு விடவே   (அந்த சமயத்தில்   cheat பண்ணியது இந்தப் பக்கத்து   வீட்டில் இருந்த criminal minded family .  ஆனால் பிரச்சனை ஏற்பட்டது எங்களுக்கும் அந்தப் பக்கத்து வீட்டிற்கும்.)  அந்தத் தோட்டத்துக்குள் போகவில்லை.  ஆனால்,  அது பெரிதாக எல்லாம் ஒன்றும் வளர்ந்து விடவில்லை. மேலும் அவர்கள் சீக்கிரமாக  transfer ஆகிப் போய்விடவே சரியாக பராமரிப்பில்லாமல்  வேலியெல்லாம் விழுந்து தோட்டம் போய்விட்டது. Actually  நாங்கள் மும்முறமாக தோட்டவேலை செய்து கொண்டிருந்தபோது, அவர்கள் அப்பா பின்புறக் கதவைத் திறந்து ,  " correct-  ஆ transfer  ஆகற  time- ல தோட்டம் போடறீங்களேடா "  என்றார். ஒரு நிமிஷம் திகைத்து விழித்த பசங்கள் அப்பாவிற்கு பதிலேதும் கூறாமல் வேலை செய்து கொண்டிருந்த என்னையும் நாராயணன் என்னும் பையனையும் பார்த்து   " நாங்கள் transfer  ஆகி விட்டால் இந்தத் தோட்டத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் "  என்று சொன்னார்கள். 
    
                  இவ்வாறு அந்தத் தோட்டம் போனபின், அந்த experience  - ஐ வைத்துக் கொண்டு நாங்கள்  gardening பண்ணினோம். அதில் interesting  ஆன ஒன்று மண்ணைச் சமப்படுத்தி பாத்தி கட்டி, அதில் கோடு கோடாக இழுத்து விட்டு அதில் வரிசையாக அவரை விதைகளைப் போட்டு மண்ணால் மூடி வைத்து அது மண்ணைப் பிளந்து துளிர் விட்டு வளர்வதை ரசிப்பது.

              நான் நன்கு பெரியவள் ஆனபின்னர் எங்கள் வீட்டிற்கும்  , பக்கத்து வீட்டிற்கும்  இடையில் இருந்த  [  adjacent sides of 4th & 5th houses  ] Tin Shed- ஐ  ( The same shed  that is mentined in  மலை ராணியின் மடியில் -  part 6 and 8 ) அரசாங்க உத்தரவின் பேரில்  remove  பண்ணி இருந்தனர். அந்த இடைவெளியில்  ஒரு peon , neat -ஆக வேலியெல்லாம் போட்டுத் தோட்டம் போட்டுக் கொடுத்தார். அதில் நிறைய  vegetables, வாழை மரம் எல்லாம் வளர்த்தோம்.
          
              Next gardening experience was  in Coimbatore.  முதன் முதலில் அப்பா கோவையில் வீடு கட்டிய பின்னர்,   4 good quality  தென்னங் கன்றுகளை (  Agricultural University -யிலிருந்து வாங்கி வரப்பட்டது )  site- ல் தோட்டத்திற்காக விடப்பட்ட இடத்தில் நட்டோம் . என் அம்மா நிறைய செடி வளர்த்தார்கள்.  Red  செம்பருத்தி வீட்டு gate  -ன்  உட்புறமாக super ஆக இருக்கும்.   முருங்கை மரத்தின் கீரையை மற்றவர்கள் பறிப்பதற்கு அம்மா allow பண்ணுவார்கள்.  இது தவிர என் பெரியம்மா வீட்டிலிருந்து கொண்டு வந்த ரஸ்தாளிக் கன்று and என் மாமியார் வீட்டிலிருந்து கொண்டு வந்த கொய்யாக் கன்று. இரண்டு வித மரங்களும் அபரிமிதமான   fruits - ஐக் கொடுத்தன. புது நிலமாதலால் நல்ல வளம்!

            திருமணத்திற்குப் பின் ஒருமுறை,  ஒரு நர்ஸரியைக் காலி பண்ணிப் போய் இருந்தார்கள்.  நானும், husband - ம் 2 wheeler  -இல் வரும்போது பார்த்தோம். நிறைய நாற்றுக்களை விட்டு விட்டுப் போயிருந்தார்கள். அதில் இருந்து கொண்டு வந்தவைகளில் ஒரு குரோட்டன்ஸ் மிக  beautiful - ஆ வளர்ந்தது,   - green and maroon colour combination .

              செடிக்காகத் தொட்டிகள் வாங்குவது ஒரு ordeal.  Mud தொட்டிகள் , plastic  தொட்டிகள்,  cement   தொட்டிகள் மற்றும்  various sizes  என வாங்கியிருக்கிறோம்.

                                       

            Actually,  குன்னூரில் எல்லாம் direct  -  ஆக மண்ணில்தான் நடுவோம்.   பொள்ளாச்சி அருகில் கிராமத்தில் இருந்த பாட்டி வீட்டிலும் ஒரு பெரிய காலி  மண் area- வில்  செடிகள், பழ மரங்கள் முதலியன இருந்தன. [ பின்புறத் தோட்டம் மாதிரி ].  மாடு, மாட்டு வண்டி, எருமைக் கன்னுக்குட்டி இருக்கும்.  சின்ன வயதில் அந்தக் கன்னுக் குட்டியின் மேலேறி ஆற்றுக்குப் போய் குளித்திருக்கிறேன்.  என் ஒரே சித்தி  [ எனக்குக் கொஞ்சம் தோழிபோல ]  மல்லிகைப் பந்தலின்கீழ் பாம்பு வந்து படுத்திருந்தது என்று சொன்ன ஞாபகம் உள்ளது.

                 மறுபடியும் ஈரோட்டுக்கு வருவோம். கொத்துமல்லி விதையைத் தூவி விட்டாதான் நன்கு வளரும், ரொம்ப புதைக்கக் கூடாது என்று விட்டால், சிட்டுக்குருவி வந்து கொத்தித் தின்று விட்டுப் போய்விடும். அதனால் லேசாக மண் மூடி இருக்கும்படி விதைக்க வேண்டும்.  ஈரோட்டின்  gardening history மறுபடியும் தொடரும்.
                 ( அன்பு நண்பர்களே,  இதனுடன் related ஆன  ' மர மல்லிகை மரம் ' என்ற post - ஐயும் படித்துப் பாருங்கள்.)

Comments

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]