2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3


                                                 

     Roja nagar association மூலமாக new year celebration நடத்தப்பட்டது. .அதையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டன. வீட்டின் எதிராக இருந்த park site- ல் இல்லாமல் சற்றுத் தள்ளி இருக்கும் மற்றொரு park site - ல் ஓட்டப் பந்தயம், சாக்கு ரேஸ் உட்பட . என் குழந்தைகளும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார்கள். Dec 31st  இரவு 12 மணிக்கு, சாந்தி வேலுமணி அவர்கள் வீட்டில் கேக் வெட்டப் பட்டது.

    மற்றொரு முறை கோலப் போட்டிக்கு judge  ஆக இருக்க வைத்தார்கள். கோலப் போட்டிக்கு நான் judge ஆ? இந்த இடத்தில் ஒரு பழமொழி நினைவுக்கு வரும்.அது அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி .இது நிறையப் பேர் அறிந்ததே. ஆனால் இது தவறான கருத்து. ஏனெனில், இஸ்லாமியர்களின் வருட calendar lunar calendar தான். அதாவது சந்திர நாட்காட்டி. நிலவு உதிப்பதை வைத்துத்தான் புதிய மாதம் கணக்கிடப்படும். ரம்ஜான் எத்தனாம் தேதி வரக்கூடும் என்பதைக் கணிப்பதற்கு என் கணவர் இத்தனாம் தேதி அம்மாவாசை, அடுத்த நாள் பாட்டியம்மை அதுக்கு அப்புறம்தான் பிறை தெரியும் என்றுதான் கணக்கிடுவார். அது மட்டுமின்றி, சுப காரியங்களை தேய் பிறையில்  செய்ய மாட்டார்கள் என் பாட்டி, அம்மா வழியில். 

    So, இந்தப் பழ மொழியைத் தாண்டி கோலப் போட்டிக்குள் நுழைவோம். எனக்கும், கோலத்துக்கும் ஸ்நானப் ப்ராப்தி கூட இல்லை என்று சொல்லி விட முடியாது. குன்னூரில் பள்ளிச் சிறுமியாக இருந்த கால கட்டத்தில்,பக்கத்து வீடுகளைப் பார்த்து, வீட்டின் முன் புறம் கோலமாவு கொண்டு புள்ளி வைத்துக் கோலமிட்டிருக்கிறேன்.  பதினொரு புள்ளிகள் கோலம், ஏழு புள்ளி அஞ்சு வரிசை, விளக்குக் கோலம், கோலமாவு அச்சில் மாவை நிரப்பி உருட்டுவது எல்லாம் தெரியும்.அப்போது  ரங்கோலி எல்லாம் கிடையாது.

   இங்கே சிலர் புள்ளிக் கோலம் போட்டிருந்தார்கள். சிலர்  rangoli போட்டிருந்தார்கள். நான் நான்கு criteria - களைக் கொண்டு கோலங்களை வரிசைப்படுத்தி பரிசுகளுக்குத் தெரிவு செய்தேன். அவை  general appearance  (immediate look,how it catches the eye) ,size,என இரண்டு. மீதி இரண்டு சரியாக நினைவு இல்லை.  Precision, colour போன்றனவாக இருக்கக்கூடும்.

          அதன் பின்னர் ஒருமுறை cooking competition-  க்கு one of the judges ஆக என்னை வைத்தனர். கரும்பு தின்னக் கூலியா? ( ஆனால் போட்டி முடிந்தபின் பார்வையாளர்கள் அனைவருக்கும் போட்டியில் வைக்கப்பட்ட உணவுகள் பகிர்ந்து கொடுக்கப் பட்டன). போட்டியில் 18 வீடுகள் கலந்து கொண்டன. 13 vegetarian dishes and 5 non- vegetarian dishes. மதிப்பெண் criteria ஆக நான்கைந்து details கொடுத்து, ஒரு pad - ம் paper- ம் , பேனாவும் கொடுத்தனர். ( கிளைக் கதை- இதை எழுதுகையில் தசாவதாரம் Kamal movieயில் ஒரு scene - ல் வெளிநாட்டினருக்கு பொட்டு வைத்து இளநீர் கொடுக்கச் சொல்லியதும், அது போலவே அடுத்த scene- ல் அவர்கள் பொட்டு வைத்துக்கொண்டு இளநீர் குடித்துக் கொண்டு இருந்ததும் நினைவுக்கு வருகிறது)

         மற்றுமொரு முறை best couples போட்டியில் நானும் என் கணவரும் கலந்து கொண்டோம். (இந்த முறை judge அல்ல. போட்டியாளர்கள்.) இதில் இரண்டாம் பரிசு. 

         எழுத்தாளர் பால குமாரன் ஒரு கதையில் தெற்குப் புற ஜன்னலைப் பற்றி எழுதியிருப்பார், 'காற்று பிய்த்துக் கொண்டு போகும் ' என்பதாக- or something like that. எங்கள் வீட்டில் six west facing windows and two ventilators. Other ventilators are east facing and other windows are facing all the other three directions, namely east,west and north. இதில் ac போடாத மேலேயுள்ள blue room- என் இளைய மகள் அறையில்  உள்ள இரண்டு window க்களில் ஒன்று west facing. கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து மடியில் தலையணை வைத்து laptop - ல் work பண்ணும்போது குளுகுளுவெனக் காற்று வந்து, உடலைச் சுற்றி வீசி மயக்கம் வர வைக்கும். 

     இதைப் பற்றி பக்கத்து வீட்டு சசிகலா என்பவரிடம் பேசிய போது , ' தென்றல் காற்று '  எனக் கூறினேன். அதற்கு அவர் தெற்குப் புறத்திலிருந்து வருவதால்தான் அது தென்றல் என்றார். என் கணவரிடம் இதைச் சொன்ன போது, ஆமாம், தென் திசையிலிருந்து வருவது தென்றல் காற்று, வடக்கில் இருந்து வருவது வாடைக்காற்று என்றார். இவற்றை நான் google- ல் search செய்தேன். மற்றும் கிழக்கிலிருந்து வரும் காற்று கொண்டல் என்றும், மேற்கிலிருந்து வரும் காற்று கோடை என்றும் கூறப்படுகிறது என்பதை அறிந்து கொண்டேன். 

          நாங்கள் ஒரே ஒரு நாயும், நிறைய லவ் பேர்ட்ஸும் வளர்த்தினோம்.  நாய்க்கு பின்க்கு என்று பெயர்.அது கண் திறக்காத குட்டியாகக் கிடைத்தது. நான் abroad செல்ல நேர்ந்தபோது அதை வேறு இடத்தில் விட நேரிட்டது கொஞ்சம் வருத்தம்தான். 

                     


      அநேகமாக எல்லா விஷயங்களையும் ஒரு  plan and ஒரு time plan பண்ணி செய்து வந்ததால் வேலைகள் சீக்கிரமாகவும், சுலபமாகவும் முடிந்து விடும் . இதனால் புதிய venture களை எடுப்பதில் சிரமம் இருக்கவில்லை.  In fact குழந்தை வளர்ப்பு முதல், வீடு எங்கள் tasteக்கு  set upபண்ணுவது, profession -ல் கவனம் செலுத்துவது வரை  taxing ஆக இல்லாமல் சந்தோஷமாக இருந்தது. Daily food plan ஒரு அட்டவணை போட்டு kitchen - ல் ஒட்டி வைத்திருந்தேன். அது ரொம்ப useful ஆக இருந்தது.

                     


        இவ்விதமாக எங்கள் 2 C, Roja nagar ஈரோடு வீட்டில் 22 வருடங்கள் வசித்தோம். இரண்டு மகள்களையும் குழந்தைகளாகக் கொண்டு வந்து வளர்த்தோம். இப்போது அவர்கள் பெரியவர்களாகி விட்டனர்.

          

 

                                         



                                      பின் குறிப்பு -  வீட்டை மேல் போர்ஷன், கீழ் போர்ஷன் எனப் பிரித்து  ( ஒன்றும் பெரிய வேலையில்லை, வீட்டின் உள்ளிருந்து மேலேறிச் செல்லும் படிக்கட்டின் இறுதியில் பெரிய சுவரும் அதில் ஆறரை அடி உயர கதவும் உண்டு - headroom போல. அந்தக் கதவின் தாழினை இட்டு பூட்டு கொண்டு பூட்டி விட்டோம். மேல் போர்ஷனுக்கு ஏறிச் செல்ல வெளியே தனிப் படிக்கட்டு உண்டு )  இரண்டு குடும்பங்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறோம்.

Comments

  1. எளிமையான நடையில் சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல

      Delete
  2. Beautifully written 👏 ❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]