கதை எழுதிய கதை

           




          நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். ஆனாலும்,  அதுதான் உண்மை. முதன் முதலில் கதை எழுத ஆரம்பித்தது  5-ம் வகுப்புப் படித்த போது. அப்போதும்  என் மாமாவின் கோலம்   போடப்பட்ட அதே  I T I  record அட்டையின் உள் புறமும், first page   -இலும் தான்.

                    கதை என்னவெனில், ஒரு சின்னப் பையன்- அண்ணன், சிறு பெண்- தங்கை, - இருவரும் ரோட்டில் [ அது கற்பனையில் அம்பராம்பாளையம் to Pollachi road ] -நடக்கும்போது ஒரு car - காரன் பெண்குழந்தை மேல் லேசாக இடித்துவிட்டுப் போகிறான்.  குழந்தை கீழே விழுந்து விடுகிறது. அப்போது, பையன்  car number - ஐ note பண்ணி எழுதி வைக்கிறான். இதில் ரொம்ப  practicality எல்லாம் பார்க்கக் கூடாது. ஏனென்றால், அவ்வளவுதான் எழுதியிருந்தேன். வளர்ந்தபின் ஒருமுறை அதை எடுத்துப் படித்தபோது சந்தோஷமாக இருந்தது. மாமா மனைவியிடமும், மகளிடமும் இந்த விஷயத்தையும் , மற்ற  memories- ஐயும் பகிர்ந்து கொண்டேன். 

             கதை கேட்கும் பழக்கம் எந்தக் காலத்தில் ஆரம்பித்தது என்று தெரியவில்லை.  ஆனால் கதை கேட்கும் மனித மூளைதான் கதை சொல்லும் கற்பனாவாதிகளின்  chance - ஆக அமைந்தது. இதன் நீட்சிதான் மதங்களை, கடவுள்களை கற்பனை பண்ண வைத்ததா? 

               கதை கேட்கும் குணம் மனிதனின் speciality.   கதை கேட்கிற நாய் வேட்டைக்கு ஆகாது என்று பழமொழி உண்டு. ஆனால்,  மனித குலம் முழுவதும் கதைதான்.

             நடு மற்றும் உயர்நிலைப்  பள்ளி மாணவியாக இருந்தபோது 1   quire note - ல் கதை எழுதினேன்.  2 சமூக நாவல்கள்.  மீட்டாத வீணை  என்ற தலைப்பில் ஒன்று. அதன்  heroine பெயர் வீணா.  மற்றொன்றின் கதைக்களமாக    Australia , India , New Zealand ஆகிய 3 நாடுகள் அமைந்தன. என் உறவினர் ( சித்தப்பாவின் மைத்துனர் ),   Australia வில் இருந்ததால் அதை கதைக்களமாக எடுத்துக் கொண்டேன். அவர் ஒரு டாக்டர்.( Paediatrician )  [ இவரைப் பற்றிய ஒரு கிளைக்கதை - நான் சிறுமியாக இருந்த சமயத்தில் இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தார். அநேகமாக  PG ஆக இருந்திருக்கும். அப்போது,   famous ENT surgeon காமேஸ்வரனிடம் என் அப்பாவிற்கு  ear surgery செய்வித்தார். பின்னர்  Australia சென்றார்.  அங்கு, ஒரு ஆஸ்திரேலியப் பெண்ணை மணமுடித்தார்.  ஒருமுறை அந்தப் பெண்ணை இந்தியாவிற்கு அழைத்து வந்தபோது நடந்த சம்பவங்களை  சொந்தக்காரர்களும், ஊர்க்காரர்களும் கதை கதையாகப் பேசினார்கள். ] 

            பின்னர்,  பாடாத வானம்பாடி என்ற சிறுகதை . இதில் வாழ்க்கையில் கஷ்டப்பட்ட ஒரு இளம்பெண் பலமுறை  suicide பண்ண  try செய்தும்  failure ஆகிறது. ஒருவாறு மனம் தேறி இனி  suicide try பண்ண வேண்டாம் என்று முடிவு செய்கின்றபோது பஸ் விபத்தில் மரணம் அடைகிறாள்.  மற்றுமொரு கதை Mrs சங்கர் யார் ? என்கிற தலைப்பில் எழுதினேன் . இதன் கதைச்சுருக்கம் என்னவென்றால் சங்கர் பத்திரிகை நிருபராக வேலை பார்க்கிறான். அவன் தாய் அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள். ஆனால் அவனோ, சமத்துவ சமுதாயம் அமைந்த பின்னர்தான் மணம் புரிவேன் என்பதாகப் பிடிவாதம் பிடிக்கிறான். இடையில் உடன் வேலை செய்யும் பெண் உட்பட மூன்று பெண்கள் அவனது வாழ்வில் வருகின்றனர். அவர்களில் யாராவது ஒருவரைத்தான் அவன் மணந்து கொள்வான் என்று அவனது அம்மாவும், வாசிப்பவர்களும் நினைத்திருக்க ஒரு திருப்பமாக அவர்கள் வீட்டில் வேலை செய்யும்  பெண்ணைத் திருமணம் செய்ய முனைகிறான். சமத்துவ சமுதாயம் அமைந்த பின்னர்தான் மணம் புரிவதென்பது நடக்காது ; எனவே, தன்னுடைய திருமணத்திலாவது அது  நடக்கட்டும் என்பது அவனுடைய கருத்து. இந்தக் கதையை எழுதி ஏறக்குறைய பத்து வருடங்களுக்குப் பின் அழகன் என்ற படம் ரிலீஸ் ஆனது. அதைப் பார்த்து வந்த என் தங்கை.  ' அக்கா, கொஞ்சம் நீ எழுதிய கதையைப் போலவே இருக்கிறது இந்த சினிமா ' என்று சொன்னாள். 

                அப்பாவுடன் சேர்த்து சகோதரர்கள்  ஆறு பேர்.  அதில் மூத்தவரின் மூத்த மகன்  பஷீர் என்பவர் - குடும்பத்தின் மூத்த அண்ணன் -  அவர் ஒரு பாலகுமாரன் ரசிகர்.  அவரிடம் நான் தி. ஜானகிராமன் நடை ( எழுத்து நடை ) பற்றியெல்லாம்  discuss  பண்ணி இருக்கிறேன். அவர்  நிறையப் படிப்பவர்கள்தான் நிறைய எழுத முடியும்  என்று சொன்னார்.

          School life முடியும் வரை எழுதினேன்.  College -  ல் ஓரிரு கவிதைகள் மட்டுமே ( அதில் ஒன்று  English ) .  பின்னர் வெகு காலம் சென்று இப்போது late ஆக எழுதுகிறேன் என்று சொன்னபோது  husband -  ன்   cousin Harris என்பவர் இந்த வயதில் எழுதுவது  experience உடன் இருக்கும் என்று கூறினார்.

      அப்புறம்  11th standard - ல்   என்ன  காரணத்தினால் என்று நினைவில்லை ; சில  சமயம்  class - ற்கு வெளியே  group  ஆக  ground -  ல் உட்கார வைக்கப் பட்டிருக்கிறோம். வட்டமாக உட்கார்ந்து teacher படிக்கச் சொன்னதைப் படிக்காமல் ,தோழியர் ஒரு word  சொல்வர்,  அதை  starting word ஆகக் கொண்டு மடமடவெனக் கவிதை சொல்வேன்.   ' வட்ட  நிலா முகத்தின் வடிவழகை உயர்த்தும் ,சுட்டெரி பார்வையுடை சுடர் விழிகள் ' ... என்றெல்லாம் சிட்டு என்ற பெயரைக் கொண்ட  botany miss ஐப் பற்றிக் கவிதை எழுதினேன்.   Pollachi - க்காரர் என்பதால் பாசம் .

        கல்லூரி இறுதியில் கூட ஒரு farewell function - ல் கவிதை எழுதி வாசித்திருக்கிறேன்.  

நான் ஆரம்பத்தில் எழுதிய கவிதை ஒன்று : -

      '  பாவை ஒருத்தி எதிரே நின்றாள் ஒயிலாக

        தோகை விரித்து ஆடும் எழில் மயிலாக

         வாகை சூடிய புன்னகையுடனே குயிலாக

         தன்னிலை மறந்து பார்த்து நின்றேன் சிலையாக

        அருகில் இருந்த தோழனின் குரல் விளியாக

       ' ஓ, இது கோயில் சிற்பமன்றோ ? ' '


Comments

  1. மேலும் எழுதவும்...நடை நன்றாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நன்றி. Ok, எழுதுகிறேன்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]